நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன்

இயக்கம்: ரோலண்ட் எமிரிக்

தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்

 ’உலகம் அழிய நேர்ந்தால்…’ என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012.

உலகம் முழுக்க பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தமிழில் ‘ருத்ரம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. கதை இன்றைய 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது.

பெரும் ஆக்ரோஷத்தோடு பூமி வாய்பிளக்க பெரிய பெரிய நகரங்கள் புதையுண்டு போகின்றன. கண் முன்னே பெரும் அவலம் நடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நின்று அந்த அழிவில் ஐக்கியமாகின்றன.

இதற்கிடையில் அமெரிக்காவில் வசிக்கும் ஜான் குசேக் தனது குடும்பத்தினரை காப்பாற்ற போராடுகிறார். பூமி மேலடுக்கு அதன் பாதாளத்துக்கு இறங்கும் நிலையில் ஜான்குசேக் காரை வேகமாக ஒட்டி குடும்பத்தினரை காப்பாற்றி விமானத்தில் ஏற்றி மயிரிழையில் உயிர் தப்புகிறார்… என்று போகிறது கதை.

அட கதையை விடுங்க. இந்த மாதிரி படங்களுக்கு கதை, திரைக்கதையை விட அதை பிரமாண்டமாய், ரசிகர்கள் வாய் பிளக்கும் விதத்தில் படமாக்குவதுதான் சவால். அந்த வகையில் மிரட்டியிருக்கிறார் ரோலண்ட். நாயகன் குடும்பத்தோடு தப்பிக்கும் காட்சி அச்சு அதல் சினிமாத்தனம் என்றாலும், அந்த காட்சியமைப்பு சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது ரசிகர்களை.

எரிமலை தீப்பிடிப்புகள் பூமிக்குள் இருந்து சீறி பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டிடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, ஒரு பல மாடி சூப்பர் மார்க்கெட் பாதியாக பிளப்பது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது என நம்மை உறைய வைக்கின்றன காட்சிகள்.

உலகம் அழியும் காட்சியை உருவாக்கிய விதத்துக்காக இயக்குநருக்கும் அவரது கிராபிக்ஸ் டீமுக்கும் உலகம் முழுவதுமே ஆச்சரியம் கலந்த பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சினிமா தொழில் நுட்பத்தின் உச்சம் இந்தக் காட்சிகள். ஒரு அழிவைச் சொல்ல இத்தனை செலவும் உழைப்பும் தொழில் நுட்பமும் தேவையா என்றெல்லாம் விமர்சனங்கள் வரக்கூடும்…

இந்தப் படத்துக்காக செலவான தொகை ரூ. 1,400 கோடி என்கிறார்கள். படம் கொஞ்சம் நீளமே. ஆனால், ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் இரண்டரை மணி நேரமும் கழிகிறது!

படம் பார்க்கச் சென்ற நேயர்கள் தமது செல்பேசிகளையும், உடமைகளையும் மெய்மறந்து நழுவவிட்டு, படம்முடிந்ததும் தியட்டர்களினுள் நின்று தேடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

தேவையான பொருட்கள்:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1/4 கப்
பால் பவுடர் – 1 கப்
மைதாமாவு – 3/4 கப்
பால் – சிறிதளாவு
எண்ணெய் – பொரிக்க
புட் கலர் – 1 சிட்டிகை
நெய் – 1 1/2 டீஸ்பூன்

சர்க்கரை பாகு செய்ய

சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை :

*3/4 கப் பால் பவுடர்+ 1/4 கப் மைதா+மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது பால் தெளித்து பிசையவும்.இந்த கலவை வெள்ளைக்கலரில் இருக்கனும்.

*மீதமிருக்கும் பால் பவுடர்+மைதா+கலர் சேர்த்து பால் கலந்து கெட்டியாக மிருதுவாக பிசையவும்.

*வெள்ளைக் கலரில் இருக்கும் மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி,அதனுள் கலர் உருண்டையை பட்டாணி அளவு எடுத்து ஸ்டப் செய்யவும்.

*இப்படியாக உருண்டைகளை உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

*திரும்பவும் ஒருமுறை உருண்டைகளை எண்ணெயில் பொரிக்கவும்.அப்பொழுது கறுப்பு கலரில் இருக்கும்.

*சர்க்கரை நீர் விட்டு காய்ச்சி பிசுப்பு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள்+நெய்++பொரித்த் உருண்டைகள் சேர்க்கவும்.

*3 அல்லது 4 மணிநேரம் கழித்து பரிமாறலாம். //

தேவையானவை :
புளி – ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி – 3 நடுத்தர அளவு
வெங்காயம் – பெரியது 1 / சின்னது 10
குழம்பு மசாலா – 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3/4
கத்தரிக்காய் – 2/3
தேங்காய் – 3 பத்தை
கடுகு – கொஞ்சம்
கறிவேப்பிலை – கொஞ்சம்
உப்பு – கொஞ்சம்

செய்முறை :
1. முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளியை ஊற வைத்துக் கொள்ளவும்

2. தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்

3. தேங்காயை மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்

4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையுடன் நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

6. புளியை நன்றாக நீரில் கரைத்து அந்தத் தண்ணீரை வதக்கிய கலவையுடன் சேர்க்கவும்.

7. குழம்பு மசாலாவை இந்தக் கலவையுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.

8. அப்புறம் அரைத்த தேங்காயை குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் புளிக்குழம்பு தயார். சோறு, இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

குறிப்பு :
இதே போல கத்தரிக்காய்க்குப் பதில் வெண்டைக்காயையும் சேர்த்துப் புளிக்குழம்பு வைக்கலாம்.

குழம்பு மசாலாவுக்கு கடையில் கிடைக்கும் சக்தி அல்லது ஆச்சி குழம்பு மசாலா பயன்படுத்தலாம். வேலை எளிது.

Microsoftன் Bing பக்கத்தில் கனடாவின் முதல் போக்குவரத்து நெரிசல்களை  இதுவரை  பார்த்துவந்தோம். இனி Google Mapபிலும் இந்த சேவையை பார்வையிடலாம்.

அத்துடன், Live Trafficஐ மாற்றம் செய்து, கடந்த 7 நாட்களில் – ஏதாவது நாளிலும்,நேரங்களிலும் எவ்வாறு Traffic இருந்தது என்றும் பார்க்கும் வசதியும் உள்ளது.

உதாரணத்திற்கு: கடந்த  வெள்ளிக்கிழமை  மாலை 7மணிக்கு  குறிப்பிடப்பட்ட இடத்தில் எவ்வாறு  Traffic இருந்தது என்றும் பார்வையிடலாம் என்பது இதன் சிறப்பு.

இதன்மூலம் எந்த நேரத்தில், எந்த இடத்தில் பொதுவாக போக்குவரத்து  நெரிசல்  என்று  கணித்து, அவ்வாறான இடத்தையும்,  நேரத்தையும் பயணத்தின் போது தவிர்க்கலாம்.

Computer, BlackBerry, IPhone மற்றும் இணைய வசதியுள்ள தொலைபேசிகள் போன்றவற்றிலும் இனி இச்சேவையை உபயோகித்து, நாம் பயணம் செல்லும் போது தேவையான மாற்று பாதையை ஒருங்கமைக்கலாம். இதனால் தேவையில்லாத  பயண இடர்களை  முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

Live Trafficஐ பார்வையிட இங்கு கிளிக்பண்ணவும்

இதுசம்பந்தமான முன்னர் இட்ட பதிவுகள்:

சாலை நிலவரம் உங்கள் வீட்டில் இருந்தே பார்க்கலாம்

2012ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்ற தலைப்பில் முன்னர் ஒருசமயத்தில் இட்ட பதிவின்போது பல நேயர்களின் விமர்சனத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது அந்தப்பதிவு.

இப்போது அது எல்லாவற்றையும் நேரிலே பார்ப்பது போல் ஒரு திரைப்படம் அதுவும் இம்மாதம் 13ம் திகதி உலக திரையரங்குகளில்  வர இருக்கின்றது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.

அப்போதானே முன்னெச்சரிக்கையாக ஏதாவது செய்யலாம். அல்லது இதலிருந்து தப்பித்துக்கொள்ள என்னென்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்று ஒரு முடிவுசெய்யலாம். முடிந்தால் முயற்சிசெய்துவிட்டு, ஏதேனும் நல்ல யோசனை இருந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் :-)

இதோ அந்தப் படத்தில் இருந்து ஒரு காட்சி!

 முன்னர் இது சம்பந்தமாக இட்ட பதிவுகள்.

உலகம் எவ்வாறு அழியும்?  

உலகம் அழியும் நாள்!

ஒரு வண்ணத்துப் பூச்சி உங்கள் கையில் இருக்கிறது, அதை படமாக வரைய நினைக்கிறீர்கள். கோடுகளால் அவுட்லைன் வரைந்து முடித்த பிறகு தான், ஆஹா… இந்த நிறத்துக்கு எங்கே போவது என குழம்பிப் போய் முடியைப் பிய்த்துக் கொள்வீர்கள் !

இலையுதிர்காலத்தில் கனடாவில் இலைகள்  கொட்டிக்கிடக்கும்  வீதியில்  நடக்கிறீர்கள், வண்ண வண்ண இலைகளைப் பார்த்து பிரமிக்கிறீர்கள். அதை ஓவியமாய் தீட்ட அமர்ந்தால் அங்கும் நிறப் பற்றாக்குறை உங்களை ஆட்டிப் படைக்கும்.

இப்படிப்பட்ட தவிப்புகள் இனிமேல் இருக்காது என தோன்றுகிறது. எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ, அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.

கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.

காதலர்களுக்கு இனிமேல் கவலையில்லை, காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்… காதல் ஓவியம்

வியக்க வைக்கும் இந்த கண்டுபிடிப்பு இதோ…

P1

 

 இதன் தொழில் நுட்பம் இதோ…

P4

 

 

P2

 

P3

Thanks :  http://winarco.com/color-picker-pen-by-jinsun-park/ மற்றும் திரு.சேவியர்

அண்மையில் இலங்கையில் நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.

இந்த வீடியோ பலவருடங்களுக்கு முன்னர் நான் பார்த்துள்ளேன். எனவே  பொய்ப் பிரச்சாரங்களை  நம்ப  வேண்டாம். அந்த  வீடியோவை  பார்க்காதவர்கள் இதோ  கீழே  பார்க்கவும். 

வல்வையில் பிறந்தவரும் தமிழ்நாடு திருச்சியில் வசித்து வந்தவருமாகிய அருளம்பலம் சந்திரலிங்கம் அவர்கள் 02.10.2009 திங்கட்கிழமை  அன்று காலமானார்.

santhira

மலர்வு : 25. 01 .1953 — உதிர்வு : 2 . 11 . 2009

அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் பூரணலட்சுமி(சின்னக்கிளி) தம்பதியினரின் கனிஷ்டபுத்திரனும், சந்திரசேகரம் தவமணிதேவி(தவம்) தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சுகிர்தாவின் அன்புக்கணவரும்,

கிமாலினி(லண்டன்), சுதர்சன்(கனடா), ஜெயமாலினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

சுந்தரலிங்கம்(இலங்கை), ராசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற அன்னை கஸ்தூரிபாய்,   ஈஸ்வரலிங்கம்(கனடா), கதிர்காமலிங்கம்(இலங்கை), வனஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பாலச்சந்திரன், இளங்குமரன், யோகேஸ்வரி ஆகியோரின் மாமனாரும், சஞ்சய், ரசானி, சுஜித்தா, ரக்சனா, ரோசினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்சுதர்சன் – கனடா  +16476687746
கிமாலினி – பிரித்தானியா  +442086822188
ஜெயமாலினி – பிரித்தானியா  +442082863055
இராசலிங்கம் – கனடா  +14167470495
ஈஸ்வரலிங்கம் – கனடா  +15145741342
வனஜா – கனடா  +15148927337

 

பச்சைப்பசேல் என்று இருக்கும் இந்த குளுகுளு மலைப்பிரதேசத்தை காட்டும் வீடியோவை ஒருமுறை இசையுடன் கேட்டு ரசித்துவிட்டு மேற்கொண்டு தொடருங்கள்.

மேலை நாடுகளில் halloween என்னும் கொண்டாட்டம் இன்று கொண்டாடப்படுகின்றது.

நாம் பேயை விரட்ட படாத பாடுபட்டுக்கொண்டிருக்கும் போது, இவர்கள் பேயை பிடித்து வீட்டில் வைத்து கொண்டாடுகின்றனர்!

இந்தவிடயத்தில் நாம் காத்துக்கறுப்பு அண்டக்கூடாது என்று எவ்வளவு முன்னெச்சரிக்கைகள்… தாயத்துக்கட்டுதல், விபூதி பூசுதல், சிலுவை அணிதல், வாசலில் எலுமிச்சை-காய்ந்தமிளகாய் -உப்பு கட்டுதல், கோலம் போடுதல், சாம்பிராணி ஊதுபத்தி கொளுத்துதல்… அப்பப்பா இன்னும் எத்தனை எத்தனை.

பத்தாததுக்கு பேயை விரட்டுகின்றேன், ஆவியை ஓட்டுகின்றேன் என்று ஒருபக்கத்தில் வேறு…

இப்படியெல்லாம் இருக்க இவர்கள் ஏன் பேயுடன் விளையாடுகின்றனர்?

 சொல்லப்போனால் பேய்களையும், பிசாசுகளையும், விகாரமான ஜந்துக்களையும் வீட்டில் வைத்துக்கொண்டாடுகின்றனர்!

ஒரு வீடு இப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது

ஒரு வீடு இப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது

பத்தாததுக்கு சிறுவர்களுக்கு பேயைப்போலவே உடை உடுத்தி, சிலர் கன்னா பின்னா என்று மேக்கப்புகள் போட்டு, வனவிலங்குகள் போல் வேடமிட்டு… இன்னும் எத்தனையோ கூத்துக்கள்.

நாகரீகத்தில் தளைத்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் – இந்த விடயம் அவர்களுக்கு மனதில் குறுகுறுப்பை ஏற்படுத்தவில்லையா?

ஒருவேளை சிறுவர்களுக்கும், பேய் என்றால் பயம் உள்ளவருக்கும் ஒரு மனத்தைரியம் உண்டாக்க இப்படி Halloween Day கொண்டாடுகின்றனரா?

அல்லது வியாபாரிகள் எல்லோரும் சூழ்ச்சியுடன் ஆசைகாட்டி(???) halloween Day costume களையும், சாக்கிலேட்டுக்களைபும் விற்பனை செய்ய இது போன்ற விழாக்களை கொண்டாட தூண்டுகின்றனரா?

அடுத்த பக்கம் »