ஜனவரி 29 கிரிகோரியன் ஆண்டின் 29வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 நாட்கள் உள்ளன.

 

  • 1595 – ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.
  • 1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

பிறப்புகள்

  • 1926 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய இயற்பியலாளர் (இ. 1996)
  • 1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய ஒலிம்பிக் வீரர்

இறப்புகள்

  •  1981 – பாலகிருஷ்ணன், நாதசுரக் கலைஞர் (பி. 1945)
  • 1998 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)

சிறப்பு நாள்

  • ஜிப்ரல்டார் (Gibraltar) - அரசியலமைப்பு நாள்

ஜனவரி 28 கிரிகோரியன் ஆண்டின் 28வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 337 நாட்கள் உள்ளன.

  • 1846 – அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.
  • 1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1925 – ராஜா ராமண்ணா, இந்திய அணுவியல் நிபுணர்

இறப்புகள்

  • 2007 – ஓ. பி. நாயர், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்

சிறப்பு நாள்

  • உலக தொழுநோய் நாள்

ஜனவரி 27 கிரிகோரியன் ஆண்டின் 27வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 338 நாட்கள் உள்ளன.

  • 1880 – தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1926 – ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
  • 1938 – நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
  • 1967 – அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1974 – சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

  • 1893- மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)
  • 1967 – அப்பொலோ 1 விண்வெளிவீரர்கள்: எட்வர்ட் வைட், (பி. 1930), வேர்ஜில் கிறிசம், (பி. 1926), றொஜர் காபி, (பி. 1935),

ஜனவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 25வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 நாட்கள் உள்ளன.

  • 1881 – தொமஸ் அல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்
  • 1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 1971 – உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.
  • 2005 – இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சனநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புகள்

  • 1872 – பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)
  • 1941 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர்

இறப்புகள்

  • 1922 – சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (பி. 1855)
  • 2006 – நெல்லை கிருஷ்ணமூர்த்தி, கருநாடக இசைக் கலைஞர்

சிறப்பு நாள்

  • ரஷ்யா: மாணவர் நாள் (தத்தியானா நாள்)

 

கனடாவில் வாழ்கின்ற வெளிநாட்டுத் தம்பதி ஒன்று அவர்களின் குழந்தைக்கு தமிழ் பெயரை சூட்டி உள்ளது.

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்தவர் டேவிட். கியூபாவைச் சேர்ந்தவர் ஸ்பானி. இவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தமிழ் இலக்கியங்கள் மீது ஸ்பானிக்கு நாட்டம் அதிகம். எனவே குழந்தைக்கு தமிழ் பெயரை சூட்டி உள்ளார்.

குழந்தையின் பெயர் சாந்தி

 தமிழர்கள் ஆங்கில பெயர்கள் சூட்டும் வேளை வெளிநாட்டுவர் தமிழ் பெயர் சூட்டுவது குறிப்பிடத்தக்கது.

Thanks: சிறுப்பிட்டி

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.