2012ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்ற தலைப்பில் முன்னர் ஒருசமயத்தில் இட்ட பதிவின்போது பல நேயர்களின் விமர்சனத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது அந்தப்பதிவு.

இப்போது அது எல்லாவற்றையும் நேரிலே பார்ப்பது போல் ஒரு திரைப்படம் அதுவும் இம்மாதம் 13ம் திகதி உலக திரையரங்குகளில்  வர இருக்கின்றது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.

அப்போதானே முன்னெச்சரிக்கையாக ஏதாவது செய்யலாம். அல்லது இதலிருந்து தப்பித்துக்கொள்ள என்னென்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்று ஒரு முடிவுசெய்யலாம். முடிந்தால் முயற்சிசெய்துவிட்டு, ஏதேனும் நல்ல யோசனை இருந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் :-)

இதோ அந்தப் படத்தில் இருந்து ஒரு காட்சி!

 முன்னர் இது சம்பந்தமாக இட்ட பதிவுகள்.

உலகம் எவ்வாறு அழியும்?  

உலகம் அழியும் நாள்!

ஒரு வண்ணத்துப் பூச்சி உங்கள் கையில் இருக்கிறது, அதை படமாக வரைய நினைக்கிறீர்கள். கோடுகளால் அவுட்லைன் வரைந்து முடித்த பிறகு தான், ஆஹா… இந்த நிறத்துக்கு எங்கே போவது என குழம்பிப் போய் முடியைப் பிய்த்துக் கொள்வீர்கள் !

இலையுதிர்காலத்தில் கனடாவில் இலைகள்  கொட்டிக்கிடக்கும்  வீதியில்  நடக்கிறீர்கள், வண்ண வண்ண இலைகளைப் பார்த்து பிரமிக்கிறீர்கள். அதை ஓவியமாய் தீட்ட அமர்ந்தால் அங்கும் நிறப் பற்றாக்குறை உங்களை ஆட்டிப் படைக்கும்.

இப்படிப்பட்ட தவிப்புகள் இனிமேல் இருக்காது என தோன்றுகிறது. எந்த நிறம் வண்ணத்துப் பூச்சியிடம் இருக்கிறதோ, அதை அப்படியே தொட்டு உங்கள் காகிதத்தில் வரையக் கூடிய தொழில் நுட்பம் வந்திருக்கிறது.

கொரியாவிலுள்ள ஜின்சன் பார்க் என்பவர் கண்டுபிடித்திருக்கும் இந்த புதிய தொழில் நுட்ப பேனா எந்தப் பொருளிலும் உள்ள நிறத்தை ஸ்கேன் செய்து அதற்குரிய RGB அளவீடுகளை அறிந்து பேனாவில் மையைத் தானே தயாரித்துக் கொள்கிறதாம்.

காதலர்களுக்கு இனிமேல் கவலையில்லை, காதலியின் கன்னத்தைத் தொட்டே ஓவியம் தீட்டலாம்… காதல் ஓவியம்

வியக்க வைக்கும் இந்த கண்டுபிடிப்பு இதோ…

P1

 

 இதன் தொழில் நுட்பம் இதோ…

P4

 

 

P2

 

P3

Thanks :  http://winarco.com/color-picker-pen-by-jinsun-park/ மற்றும் திரு.சேவியர்

அண்மையில் இலங்கையில் நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.

இந்த வீடியோ பலவருடங்களுக்கு முன்னர் நான் பார்த்துள்ளேன். எனவே  பொய்ப் பிரச்சாரங்களை  நம்ப  வேண்டாம். அந்த  வீடியோவை  பார்க்காதவர்கள் இதோ  கீழே  பார்க்கவும். 

வல்வையில் பிறந்தவரும் தமிழ்நாடு திருச்சியில் வசித்து வந்தவருமாகிய அருளம்பலம் சந்திரலிங்கம் அவர்கள் 02.10.2009 திங்கட்கிழமை  அன்று காலமானார்.

santhira

மலர்வு : 25. 01 .1953 — உதிர்வு : 2 . 11 . 2009

அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் பூரணலட்சுமி(சின்னக்கிளி) தம்பதியினரின் கனிஷ்டபுத்திரனும், சந்திரசேகரம் தவமணிதேவி(தவம்) தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சுகிர்தாவின் அன்புக்கணவரும்,

கிமாலினி(லண்டன்), சுதர்சன்(கனடா), ஜெயமாலினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

சுந்தரலிங்கம்(இலங்கை), ராசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற அன்னை கஸ்தூரிபாய்,   ஈஸ்வரலிங்கம்(கனடா), கதிர்காமலிங்கம்(இலங்கை), வனஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பாலச்சந்திரன், இளங்குமரன், யோகேஸ்வரி ஆகியோரின் மாமனாரும், சஞ்சய், ரசானி, சுஜித்தா, ரக்சனா, ரோசினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்சுதர்சன் – கனடா  +16476687746
கிமாலினி – பிரித்தானியா  +442086822188
ஜெயமாலினி – பிரித்தானியா  +442082863055
இராசலிங்கம் – கனடா  +14167470495
ஈஸ்வரலிங்கம் – கனடா  +15145741342
வனஜா – கனடா  +15148927337

 

பச்சைப்பசேல் என்று இருக்கும் இந்த குளுகுளு மலைப்பிரதேசத்தை காட்டும் வீடியோவை ஒருமுறை இசையுடன் கேட்டு ரசித்துவிட்டு மேற்கொண்டு தொடருங்கள்.

மேலை நாடுகளில் halloween என்னும் கொண்டாட்டம் இன்று கொண்டாடப்படுகின்றது.

நாம் பேயை விரட்ட படாத பாடுபட்டுக்கொண்டிருக்கும் போது, இவர்கள் பேயை பிடித்து வீட்டில் வைத்து கொண்டாடுகின்றனர்!

இந்தவிடயத்தில் நாம் காத்துக்கறுப்பு அண்டக்கூடாது என்று எவ்வளவு முன்னெச்சரிக்கைகள்… தாயத்துக்கட்டுதல், விபூதி பூசுதல், சிலுவை அணிதல், வாசலில் எலுமிச்சை-காய்ந்தமிளகாய் -உப்பு கட்டுதல், கோலம் போடுதல், சாம்பிராணி ஊதுபத்தி கொளுத்துதல்… அப்பப்பா இன்னும் எத்தனை எத்தனை.

பத்தாததுக்கு பேயை விரட்டுகின்றேன், ஆவியை ஓட்டுகின்றேன் என்று ஒருபக்கத்தில் வேறு…

இப்படியெல்லாம் இருக்க இவர்கள் ஏன் பேயுடன் விளையாடுகின்றனர்?

 சொல்லப்போனால் பேய்களையும், பிசாசுகளையும், விகாரமான ஜந்துக்களையும் வீட்டில் வைத்துக்கொண்டாடுகின்றனர்!

ஒரு வீடு இப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது

ஒரு வீடு இப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது

பத்தாததுக்கு சிறுவர்களுக்கு பேயைப்போலவே உடை உடுத்தி, சிலர் கன்னா பின்னா என்று மேக்கப்புகள் போட்டு, வனவிலங்குகள் போல் வேடமிட்டு… இன்னும் எத்தனையோ கூத்துக்கள்.

நாகரீகத்தில் தளைத்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் – இந்த விடயம் அவர்களுக்கு மனதில் குறுகுறுப்பை ஏற்படுத்தவில்லையா?

ஒருவேளை சிறுவர்களுக்கும், பேய் என்றால் பயம் உள்ளவருக்கும் ஒரு மனத்தைரியம் உண்டாக்க இப்படி Halloween Day கொண்டாடுகின்றனரா?

அல்லது வியாபாரிகள் எல்லோரும் சூழ்ச்சியுடன் ஆசைகாட்டி(???) halloween Day costume களையும், சாக்கிலேட்டுக்களைபும் விற்பனை செய்ய இது போன்ற விழாக்களை கொண்டாட தூண்டுகின்றனரா?

 

Tanya2

உலகிலேயே இவள் மட்டும் தான் இப்படி என அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கின்றனர் மருத்துவர்கள். என்ன மருத்துவம் பார்த்தாலும், என்ன ஆபரேஷன் செய்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறாள். இவளுடைய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த இன்றைய தேதியில் உலகில் மருந்தே இல்லை என்கின்றனர்.

அமெரிக்காவிலுள்ள நிவேடாவில் வசிக்கும் ஆன்கஸ் தான்யா வுக்கு வயது வெறும் 30. இளமைத் துள்ளலுடம் உற்சாகமாய் இருக்கவேண்டிய வயதில், அறைகளுக்குள் சோர்ந்து போய் கிடக்கிறாள். காரணம் சட சடவென வளரும் அவளுடைய உடல். இப்போது அவளுடைய உயரம் ஆறரை அடி ! எடை சுமார் 215 கிலோ.

பதினெட்டாவது வயதில் அழகாக ஐந்து அடி எட்டு இன்ச் எனும் வசீகர அளவில் இருந்தவள், சடசடவென வளந்து தனது முப்பதாவது வயதில் ஆறு அடி ஆறு இஞ்ச் எனுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். கடந்த பன்னிரண்டு வருடங்களில் மட்டும் இவளுடைய வளர்ச்சி 10 இன்ச்கள் ! இது விபரீத வளர்ச்சி ! உலகிலேயே முப்பது வயதில் இந்த உயரமும் எடையும் கொண்ட ஒரே பெண் இவர் தான் !

இவளுக்கு வந்திருக்கும் நோயின் பெயர் அக்ரோமேக்லியா. அதாவது ஹார்மோன்கள் கன்னா பின்னாவென வளர்வது. என்ன செய்தாலும் இதன் வளர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாது. சராசரியாய் 250 ஹார்மோன்கள் இருக்க வேண்டிய இடத்தில் தான்யாவுக்கு இருப்பது 3000 !

சிறு வயதில் சாதாரணமாய் தான் இருந்திருக்கிறாள். டீன் ஏஜில் தான் இந்த திடீர் வளர்ச்சி ஆரம்பமாகியிருக்கிறது. செருப்பு Tanya_Beforeவாங்கி வருவாள், அடுத்த மாதமே அது சின்னதாகிவிடும். வாங்கி கொண்டு வரும் ஆடைகள் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதிர்ச்சியும், குழப்பமும், கவலையும் ஒட்டு மொத்தமாக அவளைச் சூழ்ந்து கொண்டது அப்போது தான்.

பதின் வயதில் அழகாய் இருக்க வேண்டும் எனும் எண்ணம் இயல்பாகவே இளம் பெண்களுக்குள் அலைபாயும். அழகாய் இல்லாவிட்டலும் அளவாய் இருந்தேயாக வேண்டும் என நினைக்கும் வயது அது. தான்யாவுக்கு இரண்டும் போய்விட்டது. அதிகப்படியான வளர்ச்சியினால், அழகையும், களையையும், உற்சாகத்தையும் ஒட்டு மொத்தமாக இழந்து விட்டாள்.

இந்த சிக்கல் போதாதென்று உடலும் பெண்மைக்குரிய தன்மைகளை விட்டு முரட்டுத் தனமான ஆண் தோற்றமாய் மாறிவிட்டது. இனிமையாய் இருந்த குரலில் திடீரென ஒரு கரகரப்பும் வந்து சேர்ந்து விட்டது. அடுக்கடுக்காய் வந்த அதிர்ச்சியில் உறைந்து கிடந்தவளைப் பார்த்து கிண்டலடித்து விட்டு கழன்று கொண்டான் உயிராய்ப் பழகிய காதலன் !

எப்படியாவது தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என தான்யாவின் அம்மா கேரன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்தார். பல டாக்டர்களைப் பார்த்தார்கள். பல சோதனைகளைச் செய்தார்கள். கடைசியில் அவளுடைய மூளையில் திராட்சைப் பழ அளவுக்கு ஒரு கட்டி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கட்டிதான் இவளுடைய வளர்ச்சிக்கான காரணமாய் இருக்கலாம் என அவர்கள் நம்பினர். ஆனால் இவ்வளவு பெரிய கட்டியை மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் சாத்தியமில்லை என பின்வாங்கினர்.

கேரன் சோர்ந்து போகவில்லை. அமெரிக்கா முழுதும் தேடி ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்தார்கள். கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்பாடா, ஒரு வழியாக எனது சிக்கல் தீர்ந்தது என மகிழ்ந்தாள் தான்யா. ஆனால் அந்த மகிழ்ச்சி tranya3நீடிக்கவில்லை. அவள் தொடந்து வளர்ந்தாள்.

சரி உடலிலுள்ள கொழுப்பை ஆபரேஷன் மூலம் அகற்றி விடுவோம் என களத்தில் இறங்கினார்கள். பயனில்லை. மருந்துகள் மூலம் உடலிலுள்ள ஹார்மோன்களின் அளவை மூவாயிரத்திலிருந்து ஆயிரமாகக் குறைக்கப் பார்த்தார்கள். வண்டி வண்டியாய் மருந்துகள் சாப்பிட்டும் ஒன்றும் சரியாகவில்லை.

பல டாக்டர்கள் இவளை ஒரு குரங்காகப் பாவித்து பல சோதனை மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். என்ன செய்தும் உடல் மட்டும் பிடிவாதமாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது சரியாக நடக்கவும் முடியாமல் வீட்டுக்குள் வீல் சேரில் அடைபட்டிருக்கிறார்.

தன்னுடைய சொந்த ஊரிலுள்ள மக்களே தன்னை அன்புடன் நடத்தவில்லையே எனும் கவலை அவளுக்குள் நிரம்பியிருக்கிறது. மக்கள் பிறரைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இப்படி வளர்ந்ததில் என் தப்பு என்ன இருக்கு சொல்லுங்கள் ? நான் என்ன விருப்பப்பட்டா வளர்கிறேன் எனும் அவரது குரலில் ஆதங்கம் வழிகிறது.

“இன்னும் இரண்டு மாதங்கள் மட்டும் தான் நீ உயிரேடு இருப்பாய்” என ஒரு டாக்டர் சொல்லி எட்டு மாதங்களாகிவிட்டது. இதுவரை மருத்துவத்துக்காகச் செலவிட்ட தொகை மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய். ஒரு பிரயோசனமும் இல்லை. மிச்சமிருப்பது நம்பிக்கை மட்டுமே !

கடந்த மூன்று மாதங்களாக புதிதாக ஒரு டாக்டர் இவளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். பல மருந்துகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து தான்யாவின் வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். என்னுடைய வளர்ச்சியை கடவுள் போல வந்திருக்கும் இந்த டாக்டர் தடுத்து நிறுத்துவார். நானும் சாதாரண மனுஷியாக உலவுவேன் என கண்களில் கனவுகளுடனும், கண்ணீருடனும் கூறுகிறாள் தான்யா !

நன்றி: சேவியர்

keerthi

எம் நேயர் திரு.கீர்த்திவாசனுக்கு இன்று (21.10.2009) திருமணம்!

கீர்த்திவாசன் &  சிவலதா தம்பதிகளுக்கு இனிய  திருமண  வாழ்த்துக்கள் !

திருமண அழைப்பிதலை பெரிதாகப் பார்க்க கிளிக் பண்ணவும்.

 

இவர்களின் திருமணத்தில் எடுத்த சில படங்கள்:

Keerthivasan & Sivalatha's Wedding

லேசர் லைட்டை வைத்து விளையாடும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

ஏதாவது ஒரு ஜோக் அடியுங்களேன் என்று ஒரு நேயர் கேட்டார். சரி ஒரு மாற்றத்திற்காக வார்த்தைகளினால் சொல்வதைவிட காட்சியினால் காண்பதில் அழுத்தமும், அர்த்தமும் இருக்கும் அல்லவா?

அடுத்த பக்கம் »