உண்மையில் உப்புமா செய்வதை விட அதன் ஒன்றுவிட்ட அண்ணா பையனான கிச்சடி செய்வது கொஞ்சம் ரிஸ்க் இல்லாதது. தண்ணீர் அளவு, ரவையின் தன்மை போன்ற நெருக்கடிகள் நம்மை வாட்டுவதில்லை. முன்னே பின்னே இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு கலக்கலாக இருக்கும். உப்புமா என்ற பெயர் கொடுக்கும் சலிப்பை இது தருவதில்லை என்பதும் கூடுதல் பண்பு.

 

ரவைக் கிச்சடி

தேவையான பொருள்கள்:

பம்பாய் ரவை – 1 1/2கப்
வெங்காயம் – 2
உருளைக் கிழங்கு – 1
முட்டைக்கோஸ் – 5,6 இலைகள்
கேரட் – 1
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (உரித்தது)
குடமிளகாய் – 1
பீன்ஸ் – 10
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 8
இஞ்சி – சிறிது
எண்ணை – 1/4 கப்
பனீர் – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 5 கப்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித் தழை – சிறிது
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

வாணலி அல்லது பிரஷர் பேனில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து அதிகத் தீயில் வேகமாக அடிப்பிடிக்காமல்  இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். (*)

இப்போது உதிர்த்த பனீர், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூளுடன் கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ரவையைச் சேர்த்து அடுப்பில் நிதானமான சூட்டில் கிளறி, மூடிவைக்கவும்.

நன்றாக வெந்ததும் இறக்கி, நெய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறலாம்.

  • அதிகத் தீயில், காய்கறிகளை, குறைந்த நிமிடத்தில் வேகமாக அரைவேக்காடு அளவிலேயே வதக்கி நிறுத்துவது சைனீஸ் முறை. கொஞ்சம் ஆரோக்யமானதும் கூட.
  • எலுமிச்சை சாறுக்குப் பதிலாக புளித் தண்ணீர் அல்லது க்ரீம் உள்ள கெட்டித் தயிர் உபயோகிக்கலாம்.
  • தண்ணீருக்குப் பதில் முழுக்கவே தக்காளிச் சாறு உபயோகித்தும் செய்யலாம்.  இதற்கு புளி, எலுமிச்சைச் சாறு, தயிர் எதுவும் சேர்க்கக் கூடாது.

கிச்சடிக்கு, ரவையை வறுக்கத் தேவையில்லை.

நன்றி: ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்

தனது குடும்பத்தாரை படம் பிடிக்கும் வேளையில் ஏதேச்சையாக ஒரு காட்சி ஒரு வீடியோவில் பதிவாகியிருக்கின்றது.

சும்மா கால் தடக்கினாலே அங்கு நோகுது  இங்கு நோகுது என்று புலம்பும் எம் மத்தியில் இப்படி ஒருவர் விழுந்து, எழுந்து  எந்த வலியும் இல்லாமல்…நீங்களே பாருங்கள்!

606 முறை படப்பிடிப்பையும், 6.2 மில்லியன் டொலர்களையும் விழுங்கி 90 வினாடிகள் ஓடும் அசத்தலான ஒரு விளம்பரப் படத்தை எடுத்துள்ளனர். பாருங்களேன் எப்படி என்று.

வீடியோவை அறிமுகம் செய்த நேயர் தர்ஷினிக்கு நன்றி!

முன்னர் 5ம் திகதி என ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு தற்போது 4ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. உங்கள் அசெளகரிகத்திற்கு வருந்துகின்றோம்.

கருத்து வேறுபாடுகளை களைந்து, தமிழரின் ஒற்றுமையை காட்ட தமிழராய் பிறந்த, ஆதரவான அனைவரும் தவறாமல் சமூகம் தரவும்.

Event Date changed to July 4th Saturday @Queens Park
4:00 P.M. to 8:00 P.M.
Queens Park
Toronto, ON.

A event you don’t want to miss!!!


View Larger Map

உலகில் உள்ள பல நாட்டு மக்கள் இந்த கனடாவிற்கு வந்து, ஒன்றாக இனிதே வாழ்கின்றார்கள்.  அனைத்து உரிமைகளையும்,  கெளரவத்தையும்,  வசதிகளையும்  நாம்  பிறந்த  நாட்டை  விட அதிகமாக  கொடுத்த கனடாவிற்கு இன்று பிறந்த நாள்!

உண்மையில் கனடாத்தாய் தமது பிள்ளைகள் போல் அனைத்து வர்க்க மக்களையும் அரவணைத்து, அனைவருக்கும் சம உரிமை கொடுத்து நடத்தும் செயல்  உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாத விடயம்!

இன்னாளில் நாம் அனைவரும் எம் வீட்டின் முன்புறமும், வாகனங்களிலும் கனடிய கொடியை பறக்கவிட்டு எம் நன்றியையும், மரியாதையையும்  செலுத்தி கொண்டாட கடமைப் பட்டுள்ளோம்.

சரி கீழே ஒரு அசத்தலான 3D படம் உள்ளது. உங்கள் கண்களை ஒன்றோடு ஒன்று செருகிப்பார்த்தால் தெரியும். முயற்சி செய்யுங்கள்!

கீழே கடந்தவருடம் கனடா நாளிற்காக பதியப்பட்ட பகுதி உள்ளது

காகங்களை கிளிகளாக மாற்றிய கனடா !

நாம் வாங்கிய வீட்டுப்பாவனைப் பொருக்கள் அதாவது TV, Fridge, Camera, Cell Phone, Computer… இது போன்ற வேறு எந்த பொருக்களாயினும் அதனுடன் தரப்படும் User Guideஐ நாம் தேடும் போது கையில் அம்பிடாது.

எங்காவது வைத்திருப்போம், அல்லது துலைத்திருப்போம். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவற்றின் எல்லா User Guideக்களையும் இலவசமாக கீழே உல்ள படத்தின கிளிக்பண்ணி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்!

um

South Pacific என்னும் BBC தயாரித்துக்கொண்டிருக்கும் ஒரு தொடருக்காக அசத்தலான ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சி Caroline Islands என்னும் ஒரு தீவின் Pohnpei என்னும் இடத்தில் படமாக்கப்பட்டது.

‘Rudi Dieselஎன்னும் ஒளிப்பதிவாளரால் இதுவரை யாரும் எடுக்காத வண்ணம் £66,000 ($100,000)பெறுமதிவாய்ந்த high-speed camera வால் எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் இது Tuna என்னும் மீன்வகையை வலையின்றி புதிய உத்தியுடன் பிடிக்கப்படும் முறையை இந்த விடியோவில் பார்க்கல்லாம்.

அகதிகள் என்ற பெயராலே அதிக லாபம் அடைந்த புலம்பெயர் வாழ் தமிழர்களே..

நேற்று Torontoவில் அகதிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சொல்லவே வெட்கப்படும் அளவிற்கு மக்கள் கூட்டம் ! ஏன் தமிழா மறந்துவிட்டாயா?  நேற்று நடந்ததை மறப்பவன் மனிதனே இல்லை என்னும் தத்துவத்தை!

வெறும் காலுடன் நடந்த உனக்கு விதம்விதமாய் சப்பாத்துக்கள்…  கோவணம் கட்டிய உனக்கு கொட் சூட்டுகள்… கூரை விட்டினுள் கூனிக்கிடந்த உனக்கு கோட்டைபோல் வீடுகள்… பொடிநடையாக நடந்த உனக்கு பொக்கிஷமாக வாகனங்கள்…!

இப்படி சில சொற்ப காலத்தில்  உலகில் அதி வேகமாக பரினாமம் அடைந்த உயிரினம் நீதான் என்பதை அறிவாயா?

இதற்கு உனக்கு கிடைத்த ஒரே ஒரு துருப்புச்சீட்டு அகதி என்பது தான். 

100க்கு 99 வீதமானோர் முதல் முதலில் அகதி என்னும் போர்வைக்குள் வந்தது உனக்கு எப்படி மறந்து போனது?

அதன்பின் நீ உன் மனைவியை, பிள்ளைகளை, மாமாவை, மாமியை ஏன் அப்புவையும் ஆச்சியையும் கூட நீ கூப்பிட்டு கானாததை எல்லாம் காட்டினாய்.

இன்று, நீ வந்த பாதையை மறந்து, அகதிகள் தினத்தில் நீ எங்கு சென்றாய்? உன் ஒற்றுமைகள் எங்கு போட்டு புதைத்தாய்?  உன்னை Torontoவில் வாமும் Strong Community என்று ஆங்கில ஊடகங்கள் சில மாதங்களுக்கு முன் திரும்பத் திரும்ப சொன்னார்களே… நீ ஏன் இப்போ திரும்பிப் பார்க்காமலே இருக்கின்றாய்?

யூதர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் இருந்து மூச்சுக்கு முண்ணூறுதரம் முறுக்கிப் பிடித்ததால் தான் இல்லாத ஒரு நாட்டை இளுத்து வந்து உருவாக்கினார்கள்!

உனது ஒற்றுமையைக் கண்டு கதிகலங்கிய உலகத்தின் முன் உனது நிலையை தக்கவைத்துக்கொள். தமிழா உனக்குள் தமிழ் என்னும் போது, எந்த வேற்றுமையையும் களைந்து நீ முன்னுக்கு நின்றால் தான் உன்னை அயலவன் கூட மதிப்பான். அன்றேல் அவனது ஈனப்பார்வை உனக்கு நிச்சயம்.

நேற்று அகதிகள் தினத்திற்கு வந்த ஒரு நேயர் ஜெயந்தி  என்பவர் மனம் கலங்கி, ஆவேசத்தில்  உனக்காக ஒரு பாடலை உருமாற்றி அனுப்பிவைத்துள்ளார்.

எழுகவே படைகள் எழுகவே

விடியவே இரவு விடியவே

கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது

அடுப்பும் உண்டு பூனைக்கு

அதுவும் இல்லை தமிழனுக்கு

உலக மக்களே ஒன்று கூடுங்கள்

வேளை வந்தது கேள்வி கேளுங்கள்

அகதித்தமிழன் என்ற விதியை மாற்றுங்கள்

வேதாந்தம் இனி இங்கு வேண்டாம்

ராஜாங்கம் இனி எமக்கு வேண்டும்

உனக்கும் எனக்கும் வேலிகள் போட

உலகினில் எவனும் வேண்டாம்

சார்ந்து வாழும் வாழ்க்கை போல்

சாபங்கள் எங்கும் இல்லை

அடிமை விலங்கை உடைப்போம்

புதிய உலகம் படைப்போம்

வேட்டையாட சாட்டை வாங்கு

தாழ்வு நீங்க தலைமை தாங்கு

சிதறிக் கிடக்கும் நெருப்பைச் சேர்த்து

சிங்கள இருட்டை கொழுத்து…!

(உங்கள் வரிகளுக்கு நன்றி நேயர் ஜெயந்தி அவர்களே!)

இதுவும் கானாது என்றால் கீழே உள்ள பதிவுகளையும் ஒருதரம் பார்த்துவாருங்கள்.

முன்னர் இட்ட இதுசம்பந்தமான பதிவுகள்;

புலிகளாகக்கூட வேண்டாம்-எருமையாகக்கூட இல்லையே

உலகத்தமிழர் அனைவரும் ஒன்றுபடுவோம்!

பெரும்பாலான ஆண்கள் உலகில் செய்த ஒரு  சாதனைக்கான தினம் இன்று!

 என்ன… எல்லாரும் செய்ததால் அதன் பெருமை எதிர்பாலாருக்கு தெரிவதில்லை!!

எப்படி இருந்தாலும், அனைத்து தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!

fa

முன்னர் தந்தையர் தினத்திற்காக இட்ட பதிவு கீழே;

தந்தையர் தினம்

 

parvathi2வல்வையைச் சேர்ந்த திருமதி.பொ.பார்வதிதேவி அவர்கள் ஜூன் 20, 2009 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திரு த.பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தலைவர் ஐ.நடராசா-வேதநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், திரு தங்கவேலாயுதம் – தர்மரெத்தினம் ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்ற தருமராசா மற்றும் ராஜநாயகி (விமலா), நீதிராசா, வனஜா, ஜீவராசா, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலம்சென்ற நாராயணசாமி, குகதாஸ் மற்றும் விமலாதேவி(வன்னியாச்சி), பாலகிருஷ்ணன் (பாலிமாமா), சண்முகநாதன்(குட்டிமாஸ்ட்டர்), இராமகிருஷ்ணன் (ராமு) ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கின்றனர்.

தகவல்: சகோதரி யோ.விமலாதேவி(வன்னியாச்சி)

                   1 905 201 1754

அடுத்த பக்கம் »