நீங்கள் கைத்தொலைபேசி பாவிப்பவரா? Text message அனுப்புபவரா? தாராளமாக இந்த அறிவியல் யுகத்தில் அதனை செய்யலாம். விஞ்ஞான வளர்ச்சிக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் வாகனம் ஓட்டிக் கொண்டு இதனை செய்யாதீர்கள்.
நான் பல பேரைப் பார்த்து இருக்கின்றேன்.
அதும் Teen age காரர்கள் அதிகமாக இந்த வேலை செய்வதை. அவர்களும் சிக்கலுக்குள்ளாகி அப்பாவி பொதுசனத்தையும் அனியாயமாக கொல்லும் பாதக செயலை செய்பவர்களாக இருக்கின்றனர்.
சரி, ஒருமுறை இந்த வீடியோவை பாருங்கள்… திருந்துவீர்கள் என நம்புகின்றேன். நீங்கள் பெற்றோராக இருந்தால் உங்கள் வாகனம் செலுத்தும் பிள்ளைகளுக்கு இந்த வீடியோவை காட்டுங்கள்.
ஆயிரம் வார்த்தைகளை (புத்திமதிகளை) விட ஒரு காட்சி யாரையும் வசப்படுத்தும்.
அடடா… காதலிக்கும் போது என்னென்ன கற்பனைகள்… ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பனையில் போட்டி வரும் நேரம் இந்த காதலிக்கும் நேரம் தான்.
ஆனால் பிற்காலத்தில் தங்கள் துணையுடன் இதில் ஒரு வரியாவது சரிவர நடக்கின்றார்கள்?
பல காதலர்கள் பிற்காலத்தில் நினைவுகளை மீட்கும் போது மனங்களில் பாறாங்கல் தான் உடையும்…
இதையும் மீறி இன்பமாய் ரசிக்கும் சிறு கும்பலும் நமக்குள் இருக்கத்தான் செய்கின்றது.
அவர்கள் மன்மதனால் ரட்சிக்கப்பட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
அப்படி ரட்சிக்கப்பட்ட ஒரு நேயரின் விருப்பப் பாடல்…
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மலையூரில் சாரலிலே..
என்னை மார்ப்போடு சேர்த்தவளே
உன்னை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சா..ய்..த்..த..வளே….
நீயுடுத்தி போட்ட உடை… என் மனதை மேயுதடா
நீ சுருட்டி போட்ட முடி… மோதிரமாய் ஆகுமடி
இமையாலே நீ கிழிக்க இதழாலே நான் அளிக்க
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே
சடையாலே நீ இழுக்க… இடைமேலே நான் வழுக்க
காச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே
என்னை திரியாக்கி… உன்னில் விளக்கேற்றி
என்னாளும் பார்த்திருப்போம்
ஹோய்.. ஹோய்..
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
நீ முறிக்கும் சோம்பலிலே… நான் ஒடிஞ்சு சாய்ஞ்சிடுவேன்
நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நான் இருக்க.. நெடிலாக நீ வளர்க்க
சென்னைத்தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி
அறியாமல் நான் இருக்க.. அழகாக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூறுமடா
என்னை மறந்தாலும்… உன்னை மறவாத
நெஞ்சோடு நான் இருப்பேன்
ஸ்பெயின் நாட்டில் உள்ளூர் மக்களும், சுற்றூலா பயணிகளும் ஆர்வமாக பங்கு பற்றும் ஒரு விளையாட்டு இந்த Tomatina என்றழைக்கப்படும் தக்காளி எறியும் திருவிழா!
சுமார் 110 தொன் எடையுள்ள தக்காளிகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டி அதனை மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் வீசி எறிந்து கொண்டாடுவார்கள்.
ஒரு உணவுப்பொருளை இப்படி அனியாயமாக்குகின்றீர்களே என இவர்களைக் கேட்டால்,
“தக்காளிச்சாறு உடலுக்கு நல்லதொரு பொருள். அத்துடன் இப்படி ஒரு விளையாட்டு மனதுக்கும் குதூகலம் அளிக்கும் நிகழ்வு, அதைவிட தக்காளியால் எறிந்தால் யாருக்கும் நோகவும் மாட்டுது….”
என்று தம் செயலை நியாயப் படுத்திக்கொண்டே செல்வார்கள்.
இந்த தக்காளி திருவிழாவின் ஒரு வீடியோ காட்சியை கீழே காணலாம்.
இந்த ஸ்பெயின் காரர்கள் தக்காளியை இவ்வாறு நசுக்கி, மிதித்து நாசம் பண்ணுகின்றார்களே… அவேளை நாம் இந்த தக்காளியை எவ்வளவு கெளரவமாக நடத்துகின்றோம் என்று, தமிழ் மக்களின் தக்காளி விடயம் தெரியாது போலிருக்கின்றது.
தக்காளி என்றவுடன் சட்டினியும், சாம்பாறும் என்றிருந்த நிலைமாறி, கடைத்தெருவினில் தக்காளியைக் கண்டவுடன் ஒரு வெக்கச்சிரிப்பு சிரிக்குமளவுக்கு தக்காளியின் அந்தஸ்த்தை உயர்த்தியவர்கள் இந்த தமிழ் மக்கள் என்பது இவர்களுக்குத் தெரியாது.
அப்படி தெரியாத ஸ்பெயின் நாட்டவருக்காக மட்டும் இந்த வீடியோ! மற்றவர்கள் இன்று போய் நாளை வாருங்கள்!
இலங்கைக்கு போர்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரனை தேவையா என்று OMNI TV நடத்தும் வாக்கெடுப்பில் உடன் வாக்களித்து, நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
வாக்களிக்கும் நேரம் கனடிய நேரப்படி காலை 7மணியுடன் முடிவடையும் என் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னமும் அந்த பகுதி அங்கு காணப்படுகின்றது. எனவே வாக்களிக்காதோர் சென்று வாக்களிக்கவும்.
ஆம் என்றால் இந்தப்பாட்டும் உங்களுக்குப் பிடிக்கும்! கூடவே அவரைப்பற்றி தெரியாதோருக்கு தெரிந்துகொள்ளவும் பிடிக்கும்
இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையை புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் ஜூன் 2, 1943ல் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.
இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
1969 ஆம் ஆண்டு தன் 29ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய “மச்சானைப் பாத்தீங்களா..” என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.
நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினை தேடித்தந்தன.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றார்.
திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்
இளையராஜா, “பஞ்சமுகி” என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
“How to name it” என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
“Nothing But Wind” என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
“India 24 Hours” என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.
1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.
“ராஜாவின் ரமண மாலை” என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
“இளையராஜாவின் கீதாஞ்சலி” என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
“மூகாம்பிகை” என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்
சாதனைகள்
இளையராஜா, இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். எழுநூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை கோர்த்துள்ளார்.
ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர் இளையராஜா. (அந்த சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது)
தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதினையும், 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருதினையும், இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைகழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் – Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.
இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை மூன்று முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
1985இல் – சாகர சங்கமம் (தெலுங்கு)
1987இல் – சிந்து பைரவி (தமிழ்)
1989இல் – ருத்ர வீணை (தெலுங்கு)
இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர்.
இந்தபாடலை கேட்கும் போது பலருக்கு பழைய ஞாபகம் வரும். கடிதம் எழுதாத காதலர்களே இல்லை எனலாம்… கைக்குடையைக்கூட கைமாற்றிய கதைகூட உண்டு…
ஒரு நெயரின் மன நினைவலைகளுடன் நாமும் நீந்துவோம்!
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லைத் தொடவில்லை
ஏனோ விட இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதஞ் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம் தாண்டி தப்பிச் செல்வதேது
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
குருவே குருவே
இதிலென்ன அதிசயம் இளமையின் அவசியம்
இனியென்ன ரகசியம் இவள் மனம் புரியலையா
ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்
உள்ளமென்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
என் உள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா ஏது ஒன்றுபட்டபோது
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லைத் தொடவில்லை
ஏனோ விட இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா..!
நேயரே நீங்கள் கேட்ட அடுத்த பாடல் ஏற்கனவே முன்னர் பதிவேற்றப்பட்டது அந்த பாடலை கேட்க இங்கு கிளிக் பண்ணவும் தேடும் கண் பார்வை
இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.
தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்துக்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்களும், அவர்களது தூக்க நேரங்களும் ஏழரை ஆண்டுகாலம் கண்காணிக்கப்பட்டது.
இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான ‘இஸ்கெமிக் ஸ்ட்ரோக்’கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.
ஆய்வின் முடிவில் சராசரியாக 7 மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 6 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம், 8 மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14 சதவிகிதம், 24 சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.
எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சாலச் சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எல்லா அழகிகளையும் பார்க்க நேரம் எங்கே இருக்கு சும்மா ஒரு பத்து பதினைஞ்சு Top ல் உள்ளதுகளை பார்த்தால் போதும் என்பவர்கள் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்.
அட இதைவிட வேறு என்ன வேலை போட்டியிட்ட 85 பேரையும் பார்க்க வேண்டும் என்பவர்கள் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்.
அடடா அழகிப்போட்டி என்றால் நீச்சல் உடையில் எல்லாம் அங்கும் இங்கும் நடந்து திரிவார்களே அதெங்கே ஹி…ஹி… என்று ஜொல்லுவிடுபவர்களுக்கு இந்த வீடியோ.(தமிழ் சினிமாவில் பாட்டு காட்சிக்கு தம் அடித்துவிட்டு வருவது மாதிரி ஆரம்பத்தில் ஒருவன் மைக்கைப் பிடித்து பாடுவதை பார்த்துவிட்டு அங்க இங்க நகர்ந்துவிடாதீர்கள். அப்புறம் நங்கைகளை நழுவ விட்டுவிடுவீர்கள்.
இதுக்கு மேலேயும் ஜொல்லுவிடுபவர்கள் அழகிப்போட்டியில் வலைத்தளத்திற்கு சென்று வென்று வாருங்கள். இதொ அந்த தளம் Miss Universe