தற்போது மேலை நாடுகளிலும், ஏன் இந்தியா – இலங்கை போன்ற நாடுகளிலும் குழந்தைகளை எளிதாக எடுத்துச்செல்ல இந்த Strollers என்னும் தள்ளு வண்டியை உபயோகிப்பது சகஜம்.
எளிதாக உருட்டிச்செல்லும் இந்த Strollersகளினால் அதே எளிதாக ஆபத்துக்கள் வருவதற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளது.
சரியான முறைகளில் அதனை உபயோகிக்காவிடின் அதனால் பெரும் அனர்த்தங்கள் தான் நிகழும். காரணம், இதற்கு இலகுவாக உருட்ட 4 அல்லது 6 சில்லுகள் உள்ளன. இவை சிறிய சரிவிலும் உறுண்டோடும் தன்மையைக் கொண்டது.
எங்கும் தற்காலிகமாக நிறுத்தும் தேவை ஏற்பட்டாலும், அதில் உள்ள Lockகுடன் கூடிய Brakeகை அழுத்தி விடவேண்டும்.
இவை நிற்க, பல பெண்கள் தற்போது அழகிற்காக குதி உயர்ந்த பாதணிகளை பரவலாக அணிந்து வருகின்றனர். நடைமுறையில் இந்த பாதணிகளை அணிந்து அவர்கள் படும் பாடு செல்லிமாளாது.
சில தரைகளில் நடக்க தடுமாறுவதும், கால் மடங்கி சுழுக்கு ஏற்படுவதும், டொக்… டொக்… என்று அனைவரின் கவனத்தை சிதறடித்து முகச்சுளிப்பை ஏற்படுத்துவதும் நாம் அப்பப்ப காணக்கூடியதாகவே இருக்கின்றது. பத்தாததுக்கு அவர்களுக்கு காலில் ஏற்படும் வலிவேறு தொடர்கதையாகின்றது.
சரி… இந்த Strollerகளுக்கும், High Keels பாதணிகளுக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கின்றீர்கள்?
அவுஸ்திரேலியாவில் மெல்போன் நகரில் ஒரு இரயில் வண்டி நிலையத்தில் ஒரு தாய் தன் குழந்தையை Strollerல் எடுத்துவந்து இரயில் ஓடும் தளத்தில் அதனை நிறுத்திவிட்டு, brake போடாமல் விட…. அது மெதுவாக உறுண்டு இரயில் தண்டவாளத்தை நோக்கி நகர…. Strollerஐ பிடிக்க அந்தத் தாய் முயல…. அவர் அணிந்திருந்த High Keels பாதணி அதற்கு இடையூறாக…. அந்த தாயால் உறுண்டோடும் தன் குழந்தையை பிடிக்கமுடியாமல் போக…. அதேகணமே இரயிலும் வர…..
இதற்கு மேல் என்னத்தை எழுதுவது…? கிழே உள்ள வீடியோவை நீங்களே பாருங்கள்!
அக்டோபர் 17, 2009 at 3:06 மு.பகல்
ஏனோ வீடியோ வரவில்லை ….அதை பார்க்க அவசியமும் இல்லை என்பதாகவே உள்ளது உங்கள் எழுத்து..வாழ்த்துக்கள்
அக்டோபர் 17, 2009 at 3:25 மு.பகல்
வருக kuttysamy அவர்களே,
நன்றி குறையை சுட்டிக்காட்டியமைக்கு. தற்போது சரியான முறையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இப்போது வீடியோவைப் பார்க்கலாம்.