அக்டோபர் 17, 2009
தொகுக்கப்பட்ட வரவு
- பதிவு நாள்:
- அக்டோபர் 17, 2009 at 12:02 மு.பகல்
- வகைகள் :
- வாழ்த்துக்கள்
- மேலும் செய்யவும்:
- You can leave a response, or trackback from your own site.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. — Theme: Connections by www.vanillamist.com

அக்டோபர் 17, 2009 at 7:31 பிற்பகல்
வணக்கம் பார்த்திபன்
நீங்கள் தீபாவளி வாழ்த்து சொல்லி இருகிறிங்கள்,நீங்கள் எனது நண்பன் தான் ,என்றாலும் தப்பை சுட்டிகாட்டுவது எனது கடமை ,தீபாவளி எதற்காக யார் கொண்டாடுவது என்று தெரியாதா? 2 நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரையின் தொடர்பு அனுப்பி இருந்தேன் . அதில் விபரமாக உள்ளது
http://tamilthesiyam.blogspot.com/2009/10/blog-post_6129.html
உங்கள் அன்பு நண்பன்
ம .சற்குணராசா
அக்டோபர் 18, 2009 at 12:22 பிற்பகல்
வணக்கம் திரு.ம.சற்குணராசா அவர்களே;
தமிழர் பால் நீங்கள் கொண்டுள்ள கரிசனைக்கு நன்றி.
தீபாவளியைப் பற்றி பல கதைகள் உள்ளன. சிலவற்றை அந்த கட்டுரையில் குறிப்பிட்டது போல், கேட்கவே எம்மை மடையர் என்று சொல்லும் கதைகள் பல உள்ளன.
பகுத்தறிவாளன் எவனும் ஏற்றுக்கொள்ள முடியாத பல நிகழ்ச்சிகளை சமங்களில் நுளைத்து, அதை நம்பும் படி செய்ய இந்த பண்டிகைகளை கொண்டாடுவதும் மனவேதனையான சம்பவம் தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
எனது வலைப்பக்கத்தில் இலங்கைத்தமிழர் மட்டுமல்லாது இந்தியத்தமிழரும் வேறு நாடுகளில் வசிக்கும் தமிழரும் நேயர்களாக இருக்கும் வேளையில், அவர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகைக்காகவே தமிழ்நெவிக்கேஷன் நேயர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என்று போடும் சூழ்நிலை ஏற்பட்டது.
பெரும்பாலான தமிழர்கள் தமது சுற்றம் சூழ மகிழ்து கொண்டாடும் ஒரு பண்டிகை என்ற நிலையில் தான் நான் தீபாவளியைப் பார்த்தேன்.
எது எப்படி இருந்தாலும், உங்கள் விமர்சனத்தை கருத்தில் கொள்ளும் நிலை எனக்கும், அனைத்து தமிழ் மக்களுக்கும் நிச்சயம் இருக்கின்றது.
உங்கள் கருத்தை வரவேற்கின்றேன்.