வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ…
தேவி வைதேகி காத்திருந்தாளோ
மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி
தேவர்கள் யாவரும் திருமணமேடை
அமைப்பதை பார்த்திருந்தாளோ.. தேவி
திருமால், பிரம்மா, சிவன் எனும் மூவரின்
காவலில் நின்றிருந்தாளோ…
தேவி வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ…
தேவி வைதேகி காத்திருந்தாளோ
பொன்வண்ண மாலையை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ… அங்கே
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ
சீருடன் வந்துசீதனம் தந்து
சீதையை வாழ வைத்தாரோ… தேவி..
வைதேகி காத்திருந்தாளோ
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ…
தேவி வைதேகி காத்திருந்தாளோ
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
ஜனவரி 13 கிரிகோரியன் ஆண்டின் 13வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 352 நாட்கள் உள்ளன.
- 1610 – கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.
- 1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.
- 1930 – மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
- 1938 – இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.
- 1939 – அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.
- 1942 – ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன காருக்கு காப்புரிமம் பெற்றார்.
- 1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1972 – கானாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- 1992 – இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது.
- 2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.
பிறப்புகள்
- 1911 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக்கலைஞர் (இ. 1962)
- 946 – ஆர். பாலச்சந்திரன், கல்வியாளர், கவிஞர் (இ. 2009)
- 1949 – ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்.
இறப்புகள்
- 1941 – ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (பி. 1882)
Like this:
Like ஏற்றப்படுகின்றது...