மாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக, ஆஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
எம்.எச்.370 தேடலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது.
கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற எம்.எச்.370 விமானம், கடந்த மாதம் 8-ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்ற யூகத்தில் இதுவரை தேடல் நடைபெற்று வந்தது. பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக் கடலில் விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்.எச்.370 தேடலில் ஈடுபட்டுள்ள அடிலெய்டில் உள்ள ஜியோரெசோனனஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வுத் தகவலை, ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் போபி கூறுகையில், “கடந்த மார்ச் 10-ம் தேதியில் இருந்து விமானத்தை எங்களது நிறுவனம் தனியாக தேடிவந்தது. இதுவரை எந்த உறுதியான தகவலும் இன்றி தேடல் நடைபெற்ற நிலையில், தற்போது இந்தியப் பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் அலுமினியம், டைட்டானியம், இரும்பு போன்ற ரசாயனக் கூறுகள் கொண்ட பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது.
மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று நம்பக்கூடிய பொருட்களாக இவை உள்ளன. செயறகைக்கோள் மற்றும் விமானங்கள் எடுத்த புகைப்படங்களை கொண்டு, விமானம் கடைசியாக பயணித்த இடத்திற்கு வடக்கே 20-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, எங்கள் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அணு ஆயுதங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் தொழில்நுடபங்களை இந்த பணிக்காக பயன்படுத்தினோம். மலேசிய விமானம் மாயமானதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மார்ச் 5-ம் தேதி நிறுவனம் கடல்பரப்பில் எடுத்த படத்தில், தற்போது கிடைத்துள்ளப் பொருட்கள் எதுவும் காணப்படவில்லை.
எனினும், இது மாயமான விமானத்தின் உடைந்த பாகம் என்று நாங்கள் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த கோணத்திலும் ஆய்வை தொடர வேண்டும் என்று நினைக்கிறோம்” என்றார்.
முன்னதாக, விமானம் மற்றும் அதன் கறுப்பு பெட்டியை தேடும் பணியில், அமெரிக்காவின் புளூபின்-21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி ஈடுபடுத்தப்பட்டது. இந்த நீர்மூழ்கி 14 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்தது. எனினும் விமானம் மற்றும் அதன் கறுப்புப் பெட்டி குறித்து எந்த தகவலும் இல்லை. விமானத்தின் தேடல் 53-வது நாளாக தொடர்கிறது.
மேலும் இதுசம்பந்தமான வீடியோவை கீழே உள்ள லிங்கில் பார்வையிடலாம்
புத்தர் படத்தைத் தன் கையில் பச்சைகுத்தி யிருந்ததால், புத்த மதத்தை அவமதித்தார் என்று கூறி சுற்றுலா வந்த 37 வயது பிரிட்டிஷ் பெண்மணியை நாட்டை விட்டு வியாழக்கிழமை வெளியேற்றியுள்ளது இலங்கை அரசு.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி கொழும்புக்கு சுற்றுலாப் பயணியாக வந்தார் நவோமி கோல்மேன்(Naomi Michelle Coleman). அவர் தன் வலது கையில் தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் படத்தைப் பச்சை குத்தியிருந்தார். புத்த மதம் பெரும்பான்மையாக உள்ள இலங்கையில் இத்தகைய நடவடிக்கைகள் மதத்தை அவமதிக்கும் செயலாகக் கருதப்படுகின்றன. எனவே, அவர் இலங்கை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தான் புத்தரின் பக்தர் எனவும், அவர் மீது கொண்ட ஈடுபாட்டால் தன் கையில் பச்சைகுத்திக் கொண்டதாகவும் கூறினார். அதை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தினர். அவர் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு முன்பு குடியேற்ற மையத்தில் உள்ள சிறையில் வைக்கப்பட்டார். செவிலியரான அந்தப் பெண்மணி சிறையில் இருந்த நான்கு நாட்களும் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறியுள்ளார். அவரை லண்டனுக்குச் செல்லும் விமானத்தின் மூலம் நாட்டைவிட்டு வெளியேற்றியது இலங்கை.
கடந்த ஆண்டு இதே போன்றதொரு குற்றத்திற்காக வேறொரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி வெளியேற்றப்பட்டார். 2012-ம் ஆண்டு மூன்று பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் புத்தர் சிலையை அவமதித்ததாகக் கூறி வெளியேற்றப்பட்டனர்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது தந்தையின் உடல்நலம் குன்றியிருந்த வேளையில், மருத்துவமனைக்கும், பிரிவுச் செய்தி அறிந்தது இல்லத்திற்கும், இறுதிக்கிரியைகளின் போது நேரடியாக வந்து ஆறுதல் வார்த்தை கூறியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி, மற்றும் மலர்வளையம், சாந்தி அனுதாபம் செலுத்தியோருக்கும், பிற நாடுகளிலிருந்து தொலைபேசி மூலம் தொடர் கொண்டு ஆறுதல் வார்த்தை கூறியவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் St Helier & District Community Association Hill House Bishopsford Rd Morden SM4 6BL என்னும் முகவரியில் நடைபெற்று அதேமுகவரியல் மதியபோசனம் நடைபெறும் இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
V2V – Vehicle-to-vehicle (Vehicular Communication System) ஒரு தகவல் தொழில்நுடம், இந்த தொழில்நுட்பம் மூலம் சாலைத் தகவல்களை, WIFI மூலம் 10 வினாடிகள் தூரத்தில், 1000 மீ.க்கு உட்பட்டு பரிமாறுவதன் மூலம் சாலை விபத்துக்களைக் குறைக்க முடியும். தனியாக வாகனங்கள் மட்டுமல்லாது, இரு சக்கர வண்டிகள், சாலையில் செல்பவர்கள் (Wireless Pedestrian Detection Technology மூலம்) என பலரும் பயனடைவார்கள்.
வாகன நெரிசல், வானிலை காரணமாக நெரிசல் தடை,சாலை விளக்கு தொடர்பு, ஆபத்தான சாலை, ஆபத்தான வளைவுகள், சாலை திருத்தும் இடங்கள், பாடசாலை, சாலையைக் கடப்பது இப்படி பல வசதிகளும், அதிலிருந்து காப்பாற்றும் வசதிகள் இருப்பதுடன், விபத்து நடந்தால் உடனே அறிவிக்கும் வசதியும் உண்டு. விபத்து ஏற்படக்கூடிய சமயத்தில் அல்லது ஒருவர் சாலையைக் கடக்கும் போது, வேறொரு வாகனம் அருகில் வந்து விபத்து ஏற்படாது இருக்க, உடனேயே அதனை சம்பத்தப்பட்டவர்கள் அனைவரும் தெரிவித்து விபத்து நடைபெறாமல் இருக்க தகவல் பரிபாறப்படும்.
நம்மில் பலர் புதிய கைத்தொலைபேசிகள் பாவனைக்கு வரும் போது அவை தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரத்தில் மயங்கி அல்லது அவற்றில் உள்ள புதிய தகவல் தொழில் நுட்ப வசதிகளுக்காக அவற்றை வாங்கும் போது ஏற்கனவே வைத்திருந்த பழைய தொலை பேசிகளை விற்றுவிடுகிறோம் அல்லது நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறோம்.
இவ்வாறு செய்யும் போது நாம் அவற்றிலுள்ள நமது தரவுகளையும் விபரங்களையும் அழித்துவிட்டு கொடுப்பதாகவும் நினைத்துக்கொள்கிறோம். அனால் நாம் நினைப்பது போல அவை அவ்வளவு சுலபத்தில் அழிந்து விடுவதில்லை என்றும் தகவல் தொழில்நுட்பத் திருடர்கள் அவற்றை திரும்ப கண்டுபிடித்து நமது விபரங்ளை திருடிவிடும் ஆபத்து உள்ளதென்றும் தகவல் தொடர்பு மற்றும் இணைய குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாம் பாவித்த எமது பழைய கைத் தொலைபேசிகளை விற்கும் போது எமது தரவுகளையும் சேர்த்தே விற்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர். நண்பர்களுக்கு அன்பளிப்பாக அவற்றை கொடுப்பதற்கும் இது பொருந்தும்.
நாம் பாவித்த தொலைபேசிகளை நாமே உடைத்து அழித்துவிடுவதுதான் சிறந்த வழி என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். (அட எப்படிங்க மனசு வரும்..!?)
இது தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இது தொடர்பான ஒரு ஆவணப்படத்தை பாருங்கள்….
இதுவரை கிட்டத்தட்ட 70-க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பேஸ்புக் இனி ஒரு புது மொழியில் இயங்கவுள்ளது. இது என்ன புது மொழி என்கிறீர்களா? அது மனிதர்களுக்கான மொழியல்லை பேஸ்புக்கிற்கான இயக்க மொழி – programming language இதுநாள் வரை PHP மொழியில் இயங்கி வந்த பேஸ்புக் இனி அதற்கு பதில் புதிய மொழி ஒன்றில் இயங்கவுள்ளது.
ஹேக்கிங்கை தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவன பொறியாளர்கள் உருவாக்கியிருக்கும் அந்த மொழிக்கு ‘ஹேக்’ (Hack) என்றே பெயர் சூட்டிவிட்டார்கள். ஹேக் மொழி பேஸ்புக் பக்கத்தை வேகமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் பயன்படுத்த கைகொடுக்கும்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை துரைசிங்கம் அவர்கள் 15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.